வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல்.

தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூபாய். ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23, 46, 47, 31, 20, 21, 4, 2 ஆகிய வார்டுகளில் உள்ள ரேசன் கடைகளில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் ரொக்கம், பச்சரிசி மற்றும் சர்க்கரை தலா ஒரு கிலோ, முழு கரும்பு ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

இதில், திமுக திண்டுக்கல் மாநகர மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மேற்கு பகுதி அவைத்தலைவர் கண்ணன், 23-வது வார்டு அவைத் தலைவர் முருகன், துணை செயலாளர் கணேசன், பிரதிநிதி முருகானந்தம், 46-வது வார்டு கவுன்சிலர் குலோத்துங்கன், செயலாளர் சேகர், 47-வது வார்டு கவுன்சிலர் சுபாஷிணி, தெற்கு பகுதி செயலாளர் சந்திரசேகரன், வார்டு செயலாளர் சுப்பிரமணி,
31-வது வார்டு செயலாளர் விஜயகுமார், கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார்,
20-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, செயலாளர் ஜான் கென்னடி, 21-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவருமான கார்த்திக் (காங்கிரஸ்), திமுக வார்டு செயலாளர் சங்கர், 4-வது வார்டு செயலாளர் ராஜா, 2-வது வார்டு கவுன்சிலர் கணேசன், வார்டு செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட திமுக மாநகர, வார்டு, கிளை, மகளிரணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *