மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பின்லே மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஸ்டார் கால்பந்து கழகம் இணைந்து நடத்தும் தென்னிந்திய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி 11, மற்றும் 12ம் தேதி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியை மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டேன்லி துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 40அணிகள் மேற்பட்ட அணிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்.

போட்டிகளை ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் கண்டு களித்து வருகின்றனர். பல்வேறு சுற்றுகள் நடைபெற்று நாளை கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை மாலை நடைபெற உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *