ஜே சிவகுமார் செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்
திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி-2023 மாத இயல்பான மழையளவு 42.66 மி.மீ. ஆகும். நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் 91.8 மி.மீ மழை பெறப்பட்டது. 27.02.2023 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.6 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 1155 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது அணையிலிருந்து வினாடிக்கு 1004 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது

2022-23ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 60,000 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,50,000 ஹெக்டேரிலும்கோடை சாகுபடி 9,500 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,10,000 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதில் குறுவை பருவத்தில் 14,204 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும் 38,063 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும் 9,321 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 61,588 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது
சம்பா பருவத்தில் 40,737 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும் 38,552 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும்7,654 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 86,943 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தாளடி பருவத்தில் 9,637 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும் 38,115 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும் 13,624 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 61,376 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது
2022-2023ஆம் ஆண்டில் உளுந்து 42,000 ஹெக்டேரிலும் பச்சைப்பயறு 44,900 ஹெக்டேரிலும்ஆக மொத்தம் 86,900 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதில்காரீப் பருவத்தில் 1035 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், ராபி பருவத்தில் 12918 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும்ஆக மொத்தம் 32684 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது மேலும் 18684 பச்சைபயறு சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

2022-2023ஆம் ஆண்டில் நிலக்கடலை 3,000 ஹெக்டேரிலும்எள் 2000 ஹெக்டேரிலும் சூரியகாந்தி 30 ஹெக்டேரிலும் மற்றும் ஆமணக்கு 20 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதில் 1552 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 317 ஹெக்டேரில் எள் சாகுபடியும் நடைமுறையில் உள்ளது
2022-2023ஆம் ஆண்டில் பருத்தி 12,700 ஹெக்டேரிலும்கரும்பு 110 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ராபி பருவத்தில் 403 ஹெக்டேரில் பருத்தி, 109 ஹெக்டேரில் கரும்பு சாகுபடியும் நடைமுறையில் உள்ளது
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர்-1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறதிட்டம் முதலில் சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் என்று துவங்கி தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000-ம் வீதம் ஆண்டுக்கு.6 ஆயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது

திட்ட வழிகாட்டுதலின் படி, தகுதியான அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பி.எம் கிசான் உதவித் தொகை கடந்த மாதம் வரவு வைக்கப்பட்டது அடுத்த 13-வது தவணைத் தொகை வரும் ஜனவரி-2023 ஆம் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது எனவே, அடுத்த தவணை பி.எம் கிசான் உதவித் தொகை பெற நமுலுஊ-யை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது மாவட்டத்தில் இதுவரை 6314 விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனவே அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது
எனவேஇந்த திட்டத்தினபடி பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விபரங்களை மத்திய அரசின் பி.எம் கிசான் இணைய வாயிலாக விவசாயிகள் நேரடியாக ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்து பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரிடையாக ஆதார் விபரங்களை எடுத்துச் சென்று கைரேகை வைத்து பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்
பி.எம் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த இரண்டு வழிமுறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை பி.எம் கிசான் உதவித்தெகை கிடைக்கும்மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் விவசாயிகள் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.ப.சிதம்பரம் வேளாண்மைதுறை இணை இயக்குநர் ஆசிர் கனகராஜன் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் வேளாண்மை துணை இயக்குநர் ரவீந்திரன்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *