பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக “தூத்துக்குடி கார்ப்பரேஷன்” என்ற புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். இந்த செயலியை குகூள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.