திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சி ஆக்கத்தை நோக்கியா..! அழிவை நோக்கியா…! என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பூங்குயில் சிவக்குமார் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ஆர்.எஸ். சிவக்குமார் நடுவராக பங்கேற்றார். மேலும் அறிவியல் வளர்ச்சி ‘ஆக்கத்தை நோக்கியே’ என்ற அணியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கலாம் டிரீம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், மாணவிகள் சமீகா பர்வீன், மோனிஷா ஆகியோர் பங்கேற்றனர். ‘அழிவை நோக்கியே’ என்ற அணியில் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம. சுரேஷ் பாபு, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் மொ. ஷாஜகான், மாணவிகள் கலையரசி, நிவேதா ஆகியோர் பங்கேற்று பேசினர். இறுதியில் நடுவர் அறிவியலின் வளர்ச்சி ஆக்கத்தை நோக்கியே செயல்படுகிறது என்று தீர்ப்பு வழங்கினார். இறுதியில் ஆர்.ஜி மாடர்ன் சமுதாய கல்லூரி நிர்வாகி இ. விக்னேஷ் நன்றி கூறினார். பங்கேற்ற அனைவருக்கும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.