மதுரை மேற்கு ஒன்றியம் அதலை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் மதுரை உதவி இயக்குநர் சரவணன் மற்றும் நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கிரிஜா ஆகியோர் சிறந்த கால்நடைகளுக்கும்,
விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கினர். உதவி மருத்துவர்கள் முனியாண்டி , சிந்து ஆகியோர் சிகிச்சைபணிகளையும் கால்நடை ஆய்வாளர்கள் முருகையன், கயல்விழி ஆகியோர் கருவூட்டல் பணிகளையும் உதவியாளர்கள் வாசு , ஜெயாதேவி ஆகியோர் இதர பணிகளையும் மேற்கொண்டனர். பெருவாரியான கால்நடைகளும் செல்லப்பிராணிகளும் பயனடைந்தன.