திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சகத்தின் உருதுமொழி மேம்படுத்தும் தேசிய ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உருது புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் கல்லூரி விளையாட்டு திடலில் இன்று( ஜனவரி 3 ஆம் தேதி) செவ்வாய்கிழமை முதல் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை 9 நாட்கள் உருது புத்தக கண்காட்சி நடைபெறும்.
வரும் 7 ஆம் தேதி பெண்கள் மட்டும் இக்கண்காட்சியில் கலந்துக் கொள்வார்கள். இப்புத்தக கண்காட்சியில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாராம், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரிலிருந்தும், தமிழகத்தின் அதன் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான, கேரளா மாநிலத்தை சேர்ந்த உருது மக்களும், பொதுமக்களுக்கும் கலந்துக் கொள்வார்கள். கண்காட்சி நடைபெறும் நாட்களில் பேச்சுபோட்டி, கவியரங்கம், புத்தக ஆசிரியர்கள் சந்திப்பு, புத்தக வெளியீட்டு விழா, உருது நாடக நிகழ்ச்சி, கவிதை போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இருந்து வார்த்தைகளை உள்வாங்கி இந்த மொழி வளர்ந்து இருக்கின்றது.

இந்திய அரசு உருது மொழி வளர்ச்சிக்காக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

உருது மொழி வளர்ச்சிக்காக இந்திய அரசாங்கம் NCPUL மூலம் 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உருது மொழி வளர்ச்சிக்காக NCPUL சார்பாக இந்தியாவில் ஒன்று அல்லது இரண்டு புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 55 சிறந்த உருது புத்தக பதிப்பாளர்கள் தங்களது புத்தங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தவுள்ளனர்.

95 புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமய நூல்கள் உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *