கோவையில் விவசாய தொழிலாளர் கட்சி, இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு,ஸ்ரீராமசாமி கல்வி மற்றும் அறக்கட்டளை,சிரின் பவுண்டேசன் ஆகியோர் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தின விழா இரயில் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீராம் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.. அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜி முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் காளீஸ்வரி,அராபத்,மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..மகேஸ்வரி சிவப்பிரகாசம் அனைவரையும் வரவேற்று பேசினார்..இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் தமிழக அரசின் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில்முனைவோராக மாற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் நிறுவனத் தலைவர் ராணா ரபீக்,மாநில பொது செயலாளர் வெங்கடாச்சலம்,எக்சலண்ட் அக்கீம், தியாக ஒளிச்சுடர் மகளிர் மன்றம் சகோதரி ஷீபா,சபுரா, காவிரி பைப் நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர், விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் மாநிலச் செயலாளர் ராம வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் ராஜதுரை பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் முன்னதாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பெண்கள் சார்பாக ஏழாயிரம் தபால் அட்டையில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.…தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் பயன்பெறும் விதமாக பைகள் தயாரிப்பில் பயிற்சிகள் முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..இதே போல பசுமையை காக்கும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என பெண்கள் உறுதி மொழி எடுத்தனர்.