சோழவந்தான்,

சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி 17 நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று மார்ச் 27 இரவு கோயில் முன்பான பலிபீடத்தில் மூன்றுமாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மே 17ல் பூச்சொரிதல் விழாவும், மே 22ல் கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30ல் பக்தர்களின் நேர்த்திகடன் செலுத்தும் பால்குடம், தீச்சட்டி நிகழ்ச்சியும், மே 31ல் பூக்குழி விழாவும், ஜூன் 6ல் தேரோட்ட விழாவும், ஜூன் 7ல் வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும். இவ்விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார் , கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் மூன்று மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *