தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் , பொது மக்களுக்கு நலத்திட்டம் உதவி மற்றும் நீர், மோர் ,அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி ஆலோசனப்படி, அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் சுடலைமுத்து தலைமையில், அம்மாபேட்டை மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஒருங்கிணைந்த ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர். டி.ஆர். எம் .சசி(எ) துரை பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர் ,மோர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
.