எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஒன்றிய தலைவர் சிவகாமி தலைமை வகித்தார்..

இந்த ஆர்ப்பாட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்கிட வேண்டும்.பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு லோன் வழங்கிட வேண்டும்.

மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது….

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கௌசல்யா, ஒன்றிய பொருளாளர் சுமதி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *