கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதியிலும் வார்டு ஒன்றுக்கு 30 தெரு விளக்குகள் புதிதாக அமைக்க அதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு பகுதியான சிறுகுன்றா எஸ்டேட் மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க அப்பகுதி பொதுமக்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்டறிந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், நகர் மன்ற தலைவருமான எஸ்.அழகுசுந்தள்ளி செல்வம் பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது வாழைத்தோட்டம் சிதம்பரனார் பகுதியில் குடியிருப்பு அருகே இருந்த ஆபத்தான மரம் ஒன்றின் கிளைகளை அகற்றித்தர நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர் அதைத்தொடர்ந்து பொதுமக்களின் நலன்கருதி அந்த ஆபத்தான மரத்தின் கிளைகளை அகற்ற அதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது அப்போது முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் இ.ரா.சே.அன்பரசன், ஜே.மணிகண்டன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *