செய்தியாளர் தி.உதயசூரியன் அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு முத்தரையர் உறவின்முறை சங்கம் சார்பாக தெப்பக்குளம் பகுதிக்கு முளைப்பாரியுடன் வீதி உலா வருகை தந்த முத்தாலம்மன் சுவாமிக்கு மலர்மாலை, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரைப்பொங்கல் மஞ்சள், குங்குமம், நெய், வெற்றிலை பாக்கு, உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு முத்தரையர் உறவின்முறை சங்க அலுவலகம் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்..