தூத்துக்குடி மாவட்டத்தில், 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 – ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள்ஃதொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வது ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 25.04.2023 -க்;குள் www.nimionlineadmission.in/iti என்ற டிஜிடி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் நான்கு தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம். மேலும் நான்கு தொழிற் பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகள் துவங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்கிடவும் விண்ணப்பிக்கலாம். மேலும் தொழிற் பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்தல் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.