நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் அரியாக்கவுண்டம்பட்டி புகழ் பெற்ற
இளையவர் சடுகுடு கபடி கிளப் ஆலோசனைக் கூட்டம் இன்று 13-04-2023 வியாழக்கிழமை காலை இளையவர் சடுகுடு கிளப் தலைவர் ஏ.கே.பி.மணி தலைமையில் நடைபெற்றது

62 ஆண்டுகள் சிறப்பாக கபடி போட்டி நடத்தப்பட்டு இந்த வருடம், வரும் மே மாதம் 10 ஆம் தேதி 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஏக் கிரேட் 63 வது ஆண்டு மாநில அளவு கபடி போட்டி நடத்தப்பட இருக்கிறது

இதில் பல்வேறு சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட்டு அது பற்றிய அறிவிப்புகளை இன்று அரியாக்கவுண்டம்பட்டி இளையவர் கபாடி கிளப் தலைவர் ஏ .கே .பி .மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது அவர் கூறும் பொழுது ஆசிய அளவில் தொடர்ந்து 62 ஆண்டுகள் கபடி போட்டியில் நடத்தி உலக சாதனை படைத்திருக்கக்கூடிய அரியா கவுண்டன்பட்டி
இளையவர் கபாடி கிளப் மூலம் விளையாடுகின்ற கபடி வீரர்கள் பல்வேறு சாதனை படைத்திருக்கிறார்கள் மத்திய அரசு பணிகளில் பணியாற்றி இருக்கிறார்கள் இப்படிப்பட்ட கபடி சாதனையாளர்களை உருவாக்கிய ஒரு குக்கிரமமாக அரியா கவுண்டன் பட்டி கிராமம் இருக்கிறது என்றும்
.
63 ஆம் ஆண்டு கபடி விளையாட்டு போட்டியை வரும் மே மாதம் 10 ,11 தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்த இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் ஏ கிரேடு கபடி வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ 63,000 வழங்கப்பட இருப்பதாகவும் தற்போது ஏ.கே.பி மணி தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *