ர.தீனதயாளன் – செய்தியாளர்
பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு நிலை அலுவலர் இளங்கோவன் தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் தீப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்களும் தீயனைப்புப் படை வீரர்களும் கலந்து கொண்டனர்.