பாபநாசம் செய்தியாளர்
ர.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் ஆலயத்தில் பால்குடதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழா வின் முக்கிய விழாவான சக்தி கரகம் பால்குடம் காவடி எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகசமுத்திரம் நாட்டாமைக்காரர்கள், கிராமவாசிகள்,இளைஞர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.