சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது..குடும்ப விழாவாக வெற்றிகரமாக நடைபெற்ற இவ்விழாவை ஒருங்கிணைத்த நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் மாதாந்தி்ர பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஏ எஸ் எம் ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்று முடிந்த ஆண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த உதவிய சங்க உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சங்க உறுப்பினர்களின் குடும்பங்களை சார்ந்த இளம் தலைமுறை இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *