உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை உழைக்கும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் உழைக்கும் தொழிலாளர் தினமான மே தின வாழ்த்துக்களை பல்வேறு தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்,உழைக்கும் பலன் உழைப்பாளிக்கு மட்டுமே எனவும், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்து கூறும் மே தினமான இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.