நெல்லை மாநகர பகுதி யில் கழிவு நீர் ஓடைகளை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மண்டலம் 25- வது வார்டுக்கு உட்பட்ட டவுன் நயினார் குளம், எஸ்.என்.ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவு நீர் ஓடைகள் தூர்வாரப்படாமல் கிடப்பதாகவும், தற்போது அய்யப்ப பக்தர்களின் வருகை நெல்லையப்பர் கோவிலுக்கு அதிக அளவில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சுத்தம் செய்யும்படியும் அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக நயினார் குளம் சாலையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்பட்டன.
இன்று டவுன் ஆர்ச் முதல் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் ஓடைகள் சிறிய பொக்லைன் எந்திரம் மூலமாக தூர்வாரப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *