நாமக்கல்லில் ஒரே கல்லாலான மலையில் மேற்கு முகமாக அமைந்துள்ள குடவரைக் கோயிலிலான நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஜெயந்தி விழா மற்றும் அன்னதானம் நேற்று நடைபெற்றது.
பக்தர்களின் அழைப்புக்கு உடனே வரும் தெய்வமான ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சுவாமியின் ஜெயந்தி பெருவிழா குருநாதர்கள் ஸ்ரீ காமாட்சி சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண சித்தர் வழிகாட்டுதல்கள் படி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் அருளை பெற திரண்டு வந்திருந்தனர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் 7 15 மணி வரை நாமக்கல் முல்லை மஹாலில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி திருவிழா நடைபெற்றது.
சகல சௌபாக்கியமும் அருளும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் 4.30 மணிக்கு துவங்கி மாலை .
30 மணி வரை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளளுகாகு திருமஞ்சனமும், மாலை 6.30 மணிக்கு அர்ச்சனை மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
6:45 மணிக்கு அருள் வாக்கு சித்தர் 108 சக்தி பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் அருள் உரையாற்றினார் மாலை 7:15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி பெரும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கிரக தோஷம் நீங்கி, திருமண தடை விலகி, குழந்தை பேறு கைகூட, வியாதிகள் நீங்க, எதிரிகள் தொல்லை விலக, உலக கண் திருஷ்டி அகல, கடன் பிரச்சனை தீர, மன தைரியம் கைகூட, வியாபார அபிவிருத்தி அடைய, சர்வ சகல செல்வ ,சௌபாக்கியம் அருளப்பட்டது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோமம் இதில் அனைவரும் பங்கு பெற்று பயனடைந்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பாலா தேவஸ்தானம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜனசபா, ஸ்ரீ மகா பெரியவா இல்லம், ஆகியவைகள் ஏற்பாடு செய்தனர்.