மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் அடங்கிய மின்னல்கீழ்மின்னல் கூட்டுறவு நியாய விலை கடையில்
தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு
பொருட்கள் வழங்கிட தமிழக
அரசால் ஆணையிடப்பட்டது.
அதன்படி மின்னல் கீழ்மின்னல்,
உள்ள 411 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர்
வழக்கறிஞர் பாலாஜி
தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் கூட்டுறவு சங்க தலைவர் செல்லக்கண்ணு கூட்டுறவு
சங்க செயலாளர் மோகன்,
விற்பனையாளர் திருமலை
துணைத் தலைவர்
அஞ்சலி விநாயகம், உட்பட
வார்டு உறுப்பினர்கள் கிராம
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.