புதுச்சேரி அடுத்த பஞ்சவாடியில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று 7-ஆம் தேதி நடக்க இருந்த பாலாபிஷேகம், நிர்வாக காரணங்களால் ஆஞ்சநேயரின் மூல நட்சத்திர தினமான, நாளை மறுநாள் 9-ஆம் தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *