சோழவந்தான்

சோழவந்தான் அருகே செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனி.41.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கல்புளிச்சான்பட்டி வி கோவில்பட்டி செக்கான்கோவில்பட்டி நரியம்பட்டி உள்ளிட்ட 8.க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு உ.ரம் மற்றும் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வந்தநிலையில் வெண்மை புரட்சிகாக தமிழகத்தில் உள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு பசு மாட்டிற்கு ரூ.14.ஆயிரம் வீதம் மாடு வளர்ப்போர்களுக்கு கால்நடை பராமரிப்புக்காக வட்டியில்லா, கடன் வழங்க. அரசு ஆணையிட்டுஇருந்த நிலையில் விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை சங்கத்தில் பணியாற்றும் செயலாளர் மற்றும் அதிகாரி ஒத்துழைப்போடு.
ஒரு குறிப்பிட்ட. சமுதாயத்திற்கும் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகள் இருப்பதாக போலியான புகைபட ஆவணங்கள் ஆதாரமாக வைத்து.

கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டு வருவதாகவும் நரியம் பட்டி கிழக்கு பகுதியில் 30.க்கு மேற்பட்டோர் பட்டியல் இன மக்கள் வசிக்கும் வீடுதோறும் பசு மாடுகள் இருந்தும் இது வரை கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கின்றது சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை எழந்துள்ளது. இது குறித்து நரியம் பட்டி காலணி சேர்ந்த பாண்டியம்மாள். 52.கூறியபோது.தினந்தோறும் கூலி வேலை செய்து கண் தெரியாத கணவரோடு வாழ்ந்து வருகின்றேன் .

இரண்டு பசு மாடுகள் வளர்த்து வரும் நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள கூட்டுறவு,சங்கத்தில் வட்டியில்லா மாடு பராமரிப்பு லோன் கேட்டு சென்றால் அங்கு வேலை செய்யும் அதிகாரி நாளைக்கு வா என்று ஒற்றை சொல் மட்டுமே பதிலாக வருகின்றது பல மாதங்களாக. போராடியும் இது வரை லோன் கிடைக்க வில்லை ஆனால்இக்கிராமத்தில் ஒரு சமூகத்தினர் மட்டும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட. பசுமாடுகள் உள்ளதாக கூறி லோன்களை வாழங்கப்பட்டு உள்ளது..என வேதனையுடன் தெரிவித்தார்.

இதேபோல் இக்காலணியை சேர்ந்த மணிமேகலை :32 கூறியதாது;.
என்னிடம் மூன்று பசு உள்ளநிலையில் மாட்டு தொழவம் இல்லாமல் மழை காலங்களில் மாடுகள் நனைந்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் விக்கிரமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு .. கால்நடை, பராமரிப்பபிற்கான வட்டியில்லா கடன் கேட்டு நேரில் சென்றேன் அங்கிருந்த செயலாளர் உள்ளிட்ட பணியாளர் என்னிடம் பெயர் மற்றும் விலாசம் கேட்டு குறித்து கொண்டனர் வீட்டிற்கு ஆய்வுக்கு வருவதாக சொல்லியனுப்பினர். இது வரை மாடு பார்த்து ஆய்வு செய்ய யாரும் வரவில்லை .எனவே எங்கள் சமூகத்தினர். புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றசாட்டினார்.
மேலும் இது குறித்து நரியம்பட்டி விவசாயி செந்தில்செல்வம்.
கூறிகையில்.;
விக்கிரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இருந்து விவசாய கடன் பெற்று உள்ளநிலையில் என்னிடம் உள்ள, பசுமாடுகள் கரக்கும் பாலை மதுரை ஆவினுக்கு தினசரி வேன் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றேன் .சொசையிட்டில் கால்நடை பராமரிப்பு கடன் கேட்டு சென்றால் செயலாளர் மாயன் விவசாய கடன் உள்ளதால் கால்நடை பராமரிப்பு வட்டியில்லா கடன் தர மறுத்து வருகின்றார் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளேன் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *