மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் சந்திரப்பாடி ஊராட்சியில் கடல்நீர் உட்புகுவதை தடுத்தும் புதிய குளம் அமைக்கும் பணிகள் துவக்கம். மெகாபவுண்டேசன் நிமல் ராகவன் ஏற்பாட்டில் நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக 1.97. ஹெக்டேர் பரப்பளவில் 60 மீட்டர் நீளம் 50 மீட்டர் அகலம் 5 அடி ஆழத்தில் 5 இலட்சம் செலவில் குளம் வெட்டும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ .வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று கொடியசைத்துதொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் அவர்கள், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் அவர்கள், ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் செந்தில் குமார் அவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, சந்திரபாடி ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீனவ கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.