பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் நகரில் கங்கைகொண்டான் V மார்ட் சூப்பர் மார்க்கெட், திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கங்கைகொண்டான் V மார்ட் திறப்பு விழா அதன் தலைவர் அக்ரி கோ.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் துணைத் தலைவர் இளைய அடிகளார் சக்தி டாக்டர் கோ.ப. செந்தில்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி நம்ம கங்கைகொண்டான் V மார்ட் சூப்பர் மார்க்கெட் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் சுவேதா ராமதாஸ், துணைச் செயலாளர்கள்
சா.சேகர், இ.மகேஷ், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆலோசகர் குமார் வாண்டையார், தலைமை ஆசிரியர் ஓய்வு சிவசிதம்பரம், ஆசிரியர் சத்திரிய வம்சம் மாத இதழ் சுப்பிரமணியன், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் கேசவன், வணிக ஆலோசனை நிபுணர் செல்வ அருண்குமார், ஆலோசகர் ராஜா, விருதை தட்சிணாமூர்த்தி, சேத்தியாத்தோப்பு அன்புச்செல்வன், வழக்கறிஞர் பழனிமுத்து, தணிக்கையாளர் இளம்வழுதி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் இளங்கோவன், தமிழ்மலர் கொளஞ்சியப்பன், ராஜேந்திரன், அருண் பிரபாகரன், பிரியா பாலசுப்பிரமணியன், ராஜசேகர், ராசாத்தி தமிழ்ச்செல்வன், தமிழ்வாணி, பழனிவேல் தங்கராசு, சுமதி சுந்தரபாண்டியன், முருகன், ஜெயராமன், கண்ணன், விமலா தேவி இளையராஜா, இராமலிங்கம், ரஞ்சித், கலைச்செல்வன், அருள்முருகன், கணபதி,
ரேவதி சிவகுருநாதன், குமார், ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
நிறைவாக கங்கைகொண்டான் V மார்ட் துணைத் தலைவர் பலகுரல் கி.கண்ணன் நன்றியுரை கூறினார் இதில் விவசாயிகள் ஆசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.