எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையால் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற +2 தேர்வினுடைய முடிவுகள் இன்றைய தினமானது வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் சீர்காழி வட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், சீர்காழி சபாநாயக முதலியார் இந்துமேனிலைப்பள்ளியிலிருந்து
274 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள், இதிலிருந்து 265 மாணவர்கள் தேர்ச்சி பெற்று96.7 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்து முதலிடம் பிடித்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வணிகவியல் பிரிவு மாணவர் எம்.முரசொலி மாறன் 562 மதிப்பெண்கள் பெற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் சீர்காழி பகுதியிலிருந்து முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் இப்பள்ளியில் பயிலக்கூடிய வணிகவியல் மாணவர்கள் 4 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று முதன்முறையாக இப்பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளி செயலாளர் வி.சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் ஆர்.சிதம்பரநாதன் , பள்ளியின் முன்னாள் செயலர் எஸ்.பாலசுப்பிரமணியன், எஸ்.இராமகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எம்.கபாலி, பள்ளியின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம். முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர்
எஸ்.அறிவுடைநம்பி, பள்ளியின் உதவி தலைமையாசிரியர்கள் எஸ்.முரளிதரன் ,என்.துளசிரங்கன்,ஏ.வரதராஜன் ஆகியோர்கள் பாராட்டினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *