இராஜபாளையம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் வீரமணி கண்ணன் (வயது 38) ராணுவ வீரரான இவர் அசாம் மாநிலத்தில் பணியாற்றி சமீப நாளில் பதவி உயர்வுகூட பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது

தற்போது வீரமணி கண்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் . நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள வேலாயுதபுரம் விலக்கு அருகேவந்து கொண்டிருந்தபோது எதிரில் வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று தேருக்கு நேர் மோட்டார் சைக்கின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த வீரமணி கண்ணனை அப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வீரமணி கண்ணன் ஏற்கனவே விட்டதாக தெரிவித்தனர்
இதுகுறித்து தகவலறிந்த போலிசார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் கருத்தப்பாண்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *