ராணிப்பேட்டை அம்மூர் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா :-
தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்த்திடும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம் அம்மூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி தண்ணீர்-மோர் பந்தல்களை திறந்து வைத்து இளநீர், தர்பூசணிபழம், முலாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், மோர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் AK. சுந்தரமூர்த்தி,
வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட்,
அம்மூர் பேரூர் கழக செயலாளர் பெரியசாமி,
பொருளாளர் விஜயகுமார்,பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன்,பேரூர் கழக துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை,விக்னேஷ்,
அவைத்தலைவர் பிரகாஷ்,கிளை செயலாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர் .