மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துருவா என்ற ஐந்து வயது சிறுவனுக்கு பிறந்த முதல் சிறுநீரக பிரச்சனை இருந்து வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

இருந்தாலும் இரண்டு வயதுப் பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரக மாற்று செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது துருவ என்ற ஐந்து வயது சிறுவன் என்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவருடைய அத்தை ஒரு சிறுநீரகம் தானமாக கொடுக்க முன் வந்ததால் உடனடியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர்
நீலமேகன் தலைமையில்மருத்துவக் குழு டாக்டர்கள்
வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தினர்.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறான்.

இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார்12 முதல் 15 லட்ச ரூபாய் செலவாகும் இவை அனைத்தும் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்யப்பட்டது.

மேல்மருவத்தூரில் இயங்கி வரும் ஆதிபராசக்தி
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான அறுவை சிகிச்சைக்கான முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது இம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிகிச்சை செய்ய அதற்குண்டான பணிகளை செய்து வருகின்றனர்.

விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையில் செய்யப்படும் என ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தலைமை கொண்ட மருத்துவக் குழுவினர்களான மருத்துவர்கள்அறுவை சிகிச்சை குழு டாக்டர் நீலமேகம், உமேஷ் ராஜ்,ராமகிருஷ்ணன்,அமிர்தா, மயக்கவியல் துறை குமரேசன், அன்பு, முருகராஜ் சிறுநீரக மருத்துவர்,மகேந்திரவர்மன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,
ஆகியோர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *