இந்திய உச்ச நீதிமன்ற  உத்தரவின் படி நாடு முழுவதிலும் உள்ள  அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது அதே போல வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

  வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆா்.ஆா். பெருமாள், சட்ட பணிகள் குழு உறுப்பினா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் மொத்தம் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது இதில் 83 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்,  லாட்டரி சீட்டு விற்பனை,சீட்டு விளையாட்டு போன்றவை மூலம் ரூ. 1,09,000/- அபராதம் விதிக்கப்பட்டது.  10  ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 11 தோட்ட நிறுவன வழக்குகள்  முடிக்கப்பட்டது.செக் மோசடி வழக்குகள் ரூ. 6,40,000/- முடிக்கப்பட்டது.மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பால்பாண்டி, முருகன், முத்துசாமி, சுமதி ஆகியோர்களும், சட்ட தன்னார்வ பணியாளா்கள், மூர்த்தி, வால்பாறை முனியாண்டி, காஞ்சமலை முனியாண்டி, தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளா்  முத்துப்பாண்டி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *