வலங்கைமானில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதியில் வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. ஆலங்குடி யில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமை தாங்கினார், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், நகரச் செயலாளர் பா. சிவநேசன், பொதுக்குழு உறுப்பினர் பிரித்திவிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் செல்வமணி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் கேசவன், திமுக கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர்கள் கோபால், ஞானசேகரன், அமுதா தமிழரசன், மாவட்டபிரதிநிதிகள் செல்வகுமார், கரிகாலன்,விஜயபாஸ்கர்