மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் அருகே பெருங்கரனைபுத்தூர், பேரம்பாக்கம்,
சின்னகயப்பாக்கம், உள்ளிட்ட கிராமத்தில் கள்ள சாராயம்
குடித்து அப்பாவி மக்கள் எட்டு பேர் உயிரிழந்ததை கண்டித்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சித்தாமூர் மண்டலம் பா.ஜ.க சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சித்தாமூர் கூட்டுச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர்வினோஜ் செல்வம்,செங்கல்பட்டு தெற்கு மாவட்டதலைவர் பிரவீன்குமார்ஆகியோர் தலைமையில்
ஒன்றிய தலைவர் பகதூர்சேட், ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு மற்றும்
விழுப்புரம் மாவட்ட பாஜக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டுதமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.