கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற்குடைகள் :

நேற்று முன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து அதற்கு முன்பும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் காத்திருக்கும் போது வெயிலால் பெரிதளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதை தடுக்கும் நோக்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கோடை வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க நிழற்குடைகளை இன்று முதல் அமைத்துள்ளனர் இந்த நிழற்க்குடை அமைப்பானது வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *