சிதம்பரம்

அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறையில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு விழா, இறுதியாண்டு மாணவர்களுக்கான வழி அனுப்பு விழா, வரலாற்றுப் பேரவை மன்ற நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் டாக்டர் சங்கரி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.முனைவர் பட்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.

இணை பேராசிரியர் டாக்டர் வி.திருமுருகன், இனை பேராசிரியர் டாக்டர் எம் சி ராஜா, இணை பேராசிரியர் டாக்டர் ரவிச்சந்திரன், அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புரை ஆற்றியும், பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கரி, இணை பேராசிரியர் டாக்டர் கண்ணன்,அலுவலர் டாக்டர் பரமசிவம், அலுவலர் கோவிந்தன் ஆகியோர் எற்புரை ஆற்றினர்.

முனைவர் பட்ட ஆய்வாளர் சுரேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர் ரபேல் முனைவர் பட்ட ஆய்வாளர் கூ.அம்பேத் ஆகியோர் நிறைவு உரையாற்றினர்.

இறுதியாக முனைவர் பட்ட ஆய்வாளர் கோபால் அவர்கள் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *