பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூரில் வாராந்திர சிறப்பு குறைத்து முகாம் நடைபெற்றது அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள் இந்த முகாமில் மொத்தம் 22 மனுக்கள் விசாரிக்கப்பட்டன மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இந்த குறைதீர் முகாமில், அரியலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், அவர்கள் (SJ & HR ) சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்) ராஜ சோமசுந்தரம் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்) ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *