எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ கைலாசநாதருக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதே போல நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று நந்தி பகவானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபாரணை காட்டப்பட்டது.
முன்னதாக ஸ்ரீ கைலாசநாதர் தர்ம சம்வர்த்தினி அம்பாள் கோவிலை சுற்றி திருத்தேரில் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.