எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தோழர் தலைசிறந்த இலக்கியவாதி,பேச்சாளர்,எழுத்தாளர்தோழர் தா.பாண்டியன், முன்னாள் எம்பி முன்னாள் மாநிலச்செயலாளர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு இராசிபுரம் வி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்அலுவலகத்தில் நடைபெற்றது..
அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தி கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன..
இந்நிகழ்வுக்கு ராசிபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.மணிமாறன், அவர்கள் தலைமை வகித்தார்..
தொடர்ந்து மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தி கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன..
இந்த நிகழ்வில் முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்
எஸ்.மணிவேல்,
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் மீனா,வெண்ணந்தூர்
ஒன்றியச் செயலாளர்
செங்கோட்டுவேல்,
சேலம் வழக்கறிஞர் சிபிஐ கல்பனா, நகர துணைச் செயலாளர்
கிருஷ்ணமூர்த்தி,
திவிக நகரச் செயலாளர்
பிடல் சேகுவேரா , நகர செயற் குழு உறுப்பினர்கள்
பயாஸ்,
ராஜா,
மற்றும் வெண்ணந்தூர் மணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்…