எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டை ஏரி அருகே உள்ள பம்பாய்கார் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக பல்வேறு வீடுகளில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆனது அருகாமையில் உள்ள தட்டான்குட்டை ஏரிக்கு சட்ட விரோதமாக குழாய் அமைத்து அதன் மூலம் கழிவு நீர்களை ஏரியில் கலக்கப்படுகிறது.

மேலும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும் அதிகளவில் வீசி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சுற்றுச்சூழல் அதிகாரி,மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் கார்த்திகேயன், முரளி, தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை, வருவாய் துறை உதவியுடன் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 சாயப்பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

மேலும் சாயப்பட்டறை உரிமையாளர்களிடத்தில் அழைத்துப் பேசிய அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடு வேண்டாம் என எச்சரிக்கை செய்து சென்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *