வீராணத்தில் சூறைக்காற்றில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன, பள்ளி சுவர் இடிந்தது

கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் நேரில் ஆய்வு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீராணத்தில் நேற்று வீசிய சூறைக்காற் றில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்,
பள்ளி காம்பவுண்ட் சுவர், வீட் டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகின்ற நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்து டன் காணப்பட்டது.

இந்நிலையில் சுரண்டை அருகே வீராணத்தில் 5 மணி அளவில் சூறைக்காற்று வீசியது. இதில்
கோவிந்தசாமி,சீனிப்பாண்டி, கருப்பாயி அம்மாள் உள்பட 8-க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் வயல் பகுதியிலுள்ள மின்கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.

இதில் முஸ்லிம் பள்ளி வீதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், பள்ளி காமெண்ட் சுவர் சேதமடைந்தது.

அதேபோல்அப்பகுதியில் பழமைவாய்ந்த மரங்கள் சாய்ந்தன.இதே போன்று அரசு பள்ளியில் உள்ள மரங்களும்
சாய்ந்தது,வீராணத்தில் ஐந்துக்கு உள்ள ஓடுகள் காற்றில் பறந்தன.தான்தோன்றியம் மன் கோவிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேற்கூறைகள், வீராணம் குளத்து கரையில் உள்ள மருதூர் சாஸ்தா கோயில் கட்டிடம் சேதமடைந்தன .

தகவல் அறிந்து வந்த வீராணம் ஊராட்சி மன்ற தலைவர்
அ. வீரபாண்டியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இவருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா,
ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜமீலா பீவி காஜாமைதீன்,
கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கிராம உதவியாளர் முருகராஜ்,மற்றும் வார்டு உறுப்பினர்கள்,டேங் ஆப்ரேட்டர் முருகையா, பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *