கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்களில் உள்ள முன்களப்பணியாளர்களைக்கொண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஆலோசப்படி நேற்று முன்தினம் 17 ஆம் தேதியன்று யானைகளை நேரடி கணக்கெடுப்பும், நேற்று 18 ஆம் தேதி நேர்கோட்டு பாதையில் உள்ள யானைகளின் லத்தி என்ற சாணம் கணக்கெடுப்பும், இறுதி நாளான இன்று 19 ஆம் தேதி நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மூன்று தினங்களாக நடைபெற்றது அதன்படி இறுதி நாளான இன்று வால்பாறை வனச்சரம் அக்காமலை ஆத்துக்கடைசி வனச்சரக நீர்நிலைகள் பகுதிகளில் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது இந்த கணக்கெடுப்பில் வனவர் அய்யாச்சாமி மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *