மன்னார்குடி செய்தியாளர்: தருண்சுரேஷ்

கனிமவள கொள்ளையால் ஒட்டுமொத்த தமிழகம் பேராபத்தை சந்திக்கப் போகிறது. மது விற்பனையால் மக்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி .

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. தமிழ்நாட்டில் கனிம வளம் கொள்ளை மற்றும் மது விற்பனை மூலம் மட்டுமே வருவாய் பெருக்குகிறோம், திட்டங்களை செயல்படுத்துகிறோம் என தமிழக அரசு முழக்கமிடுவது வேதனை அளிக்கிறது.

இதனை கைவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், கனிமவள கொள்ளையால் ஒட்டுமொத்த தமிழகம் பேராபத்தை சந்திக்கப் போகிறது. மது விற்பனையால் மக்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் மனித வளம் எந்த வகையிலும் முன்னேறாது. 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். இதன் மூலம் கருப்பு பணப் பதுக்கல்காரர்களுக்கு மறைமுக துணை போவதாக இது அமைந்து விடக்கூடாது. உரிய கால அவகாசம் கொடுத்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் அழிக்க வல்லது. நீர்நிலைகள் நீர்வழிப்பாதைகள் ஏரி குளம் குட்டைகள் உள்ளிட்டவற்றை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அடிப்படை நோக்கம் கொண்டதாகும்.

தமிழ்நாடு பேரழிவை சந்திக்கும். இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் மே22ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப உள்ளனர். இதனை ஏற்று தமிழக முதலமைச்சர் திரும்பப் பெற முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் விவாதம் இன்றி மறைமுகமாக குரல் வாக்கெடுப்பு என இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தமிழக மக்கள் கருத்தறியாமல் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். அதற்காக அனுமதியும் கேட்டிருக்கிறோம். அனுமதி கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். காவிரி, தென்பெண்ணை ஆறுகளை கர்நாடகம் கழிவுநீர் கால்வாயாக மாற்றிவருகிறது.

இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் பேரழிவை சந்திக்கப் போகிறார்கள். தமிழக அரசு மறைமுகமாக கர்நாடகாவிற்கு துணை போகிறதோ? என்று அஞ்ச தோன்றுகிறது. வாய்திறக்க தமிழக அரசு மறுப்பதால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு அவசரகால கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *