டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். புதுடெல்லி, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்துக்கு நேரில் சென்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *