பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர்மாவட்டம் பாபநாசத்தில்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து மாநில பதிவாளராக பணியிடமாற்றம் செல்லும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள் நினைவு பரிசாக அளித்து பிரியாவிடை வழங்கினர் நிகழ்வில் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர்
சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் , ஏராகரம் வீ.சாமிநாதன், மதகரம் வாசு, வளத்தாமங்கலம் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.