தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் அனேரி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான ஜெ.குரு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜெ. குருவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பாமகவின் மாவட்ட துணைத் தலைவர் கோபால். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிலம்பரசன். விவசாய சங்க தலைவர் வீரராகவன். மற்றும் விவசாய சங்க துணை தலைவர் திருப்பதி மற்றும் பாமக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..