வலங்கைமானில் கும்பகோணம் குரு சேகரம் டி இ எல் சி பாபநாசர் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் டி இ எல் சி பள்ளி உள்ளது. இப்பகுதியில் கும்பகோணம் குரு சேகரம் டி இ எல்சி பாபநாசர் ஆலயம் கட்டுவதற்கு தாங்கி அத்தியட்சகர் முனைவர் மாமறை ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் சபை குருமறை இ. ஜான்சன் சாமுவேல், சபை உபதேசியார் ஆர். இன்பராஜ், பெண்கள் ஜக்கிய சங்கம் கே. எஸ். எஸ். ஜோதிபாய், சபை சங்க உறுப்பினர்கள் டி. கமல் ராஜ், பீட்டர் பால் ரிச்சார்டு, மூப்பனார் மோசஸ் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.