தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் -2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீர்வாய அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைப்பெற்றது.
ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேல் சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் ஓசானா பெர்ணாண்டோ ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் வட்டத்தில் குறுவட்டங்களு க்குட்பட்ட கிராமங்களில் உள்ள வருவாய்துறைக்கானகணக்குகள் சாரிப்பார்த்தல் பொதுமக்களிடம் 200-மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு
10-பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்,
10- பயனாளிகளுக்கு பட்டா, மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20-பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில்,வட்ட வழங்கல் அலுவலர் அப்தூல் சமது, தேர்தல் தனி துணை தாசில்தார் மாசனமூர்த்தி,மண்டல துணை வட்டாட்சியர் கருணாகரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சாமி, மற்றும் ஜமாபந்தி காணக்கு அலுவலர்கள், குறுவட்ட வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.