விழுப்புரம் வடக்கு மாவட்ட மயிலம் மத்திய திமுக ஒன்றிய இளை ஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கொல்லியங்குணத்தில் நடைபெற்றது.

இக்கோட்டத்திற்கு மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் கோ. செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் சேதுநாதன், டாக்டர் மாசிலாமணி மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி இணை அமைப்பாளர் கார்த்திகேயன்,இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சங்கர் வரவேற்றனர்.. சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பாரி கலந்து கொண்டு திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி , மாவட்ட சிறுபான் மையின அமைப்பாளர் அன் சாரி ,மயிலம் மத்திய நிர்வாகிகள் பரசுராமன் பழனி ஜெயராமன், சங்கர், தமிழரசன்,சத்யா சின்னதுரை, பிரகாஷ் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
இறுதியாக கொல்லியன்குணம் திமுக கிளை செயலாளர் S. சதீஷ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *