சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் பரிவாரங்கள் சகிதமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன ராஜகோபுரம் நிர்மாண ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம், வைகாசி மாதம் 18ஆம் நாள், 01.06.2023 வியாழக்கிழமை, வளர்பிறை துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதனத்தில் காலை 8.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மகா தீபாராதனை, மகா அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து சிறப்பு மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத் தலைவர் என்.வீரராகவன் தலைமையில் சிவா விஷ்ணு சேவார்த்திகள் சங்க செயலாளர் பெரம்பூர் ஏ.பக்தவச்சலம் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள் லயன் ஆர்.பி.தர்மலிங்கம், ஏ.ஆர்.ஆர்.அரசப்பன் ஆகியோர் முன்னிலையில் ஆலய நிர்வாகிகள், கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.