சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்கனூரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதை அடுத்து நந்தி, பலிபீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முத்தாலம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கரப்பநாயக்கனூர், அய்யம்பட்டி, கோழிப்பட்டி கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.